பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டாள் பிள்ளைத்தமிழ் 大90

"விதியைப் பெருகா ரனனுக்கு இணையார்?

விமலைக்கு இணையார் யார்?

விழவில் சுழல்வீர் நதிகட்கு இறையாம்

விரசைத் துறைமேல்வாழ்

பதியிற்கு இணையாய் ஒருபொற் பதிநீர்

பகர்தற்கு உளதாமோ?

பதியைப் பசுபா சமொடு உற் றிடுவீர்!

பதியுள் புகுவீராய்

மதிகெட்டு உழல்வீர் மதியைத் தருநான்

மறைகற்று அறியீரால்!

வழுவத் தைவிடீர் " எனும்.உத் தமர்மா

மதிபெற் றவராய்வாழ்

ததியர்க்கு உயிரே புதுவைப் பதியாய்!

தாலோ தாலேலோ!

சரதத் திருவே பரதத் துவமே!

தாலோ தாலேலோ!

(42)

தான்்முகனைப் படைத்து தொகைப் படைப்புக்குக் காரணமான நாராயணனுக்கு இணை யார் அடியாரை ஆட்கொள்ளும்படி புருடகா ரம் செய்யும் பெரிய பிராட்டிக்கு இணையானவர் யார்? யார்? .

வீணாக ஏதேதோ தெய்வத்தை வழிபட்டுக் கொண்டு சுழற்கின்ற வர்களே ஆறுகட்கெல்லாம் தலையாறாகிய விரசை ஆற்றுத் துறைக்கு அப்பால் வாழ்கின்ற திருமாலுக்கு இணையாக ஒர் அழகிய தெய்வம் நீவிர் சொல்வதற்கு உளர் ஆவரோ? பதியைப் பசு பாசமோடு இணைத் துப் பேசுவீர் இறுதியில் பதியுட் கலப்போம் என்று பேசி மதிகெட்டு உழ ல்வீர்காள் அறிவைத் தருகின்ற நான் மறைக் கற்று அறியீர்! இத்தகைய மனக் குற்றத்தை விடமாட்டீர்! என்று உலகினருக்கு வாய்மொழிகின்ற சால்பினராய் மாமதி பெற்றவராய் வாழ்கின்ற தொண்டருக்கு உயிரே! புதுவைப் பதியாய்! தாலோ தாவேலோ! உண்மைத் திருவே! இறைவியே! தாலோ தாலேலோ!