பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரசவாதம் செய்த படலம்

109


அவள் வாழ்நாளுக்குப் பிறகும் அத்திரு உருவம் யுகத்தின் மாற்றத்துக்கு ஏற்பப் பொன் நிலை மாறித் தன் நிலை கெட்டுப் பல உலோகங்களில் நிலைத்து நின்றது. இன்னும் இது பொன்னம்மாள் வடித்த உரு என்று பேசப்பட்டு வழிபாடு பெற்று வருகிறது. 

37. சோழனை மடுவில் வீட்டிய படலம்

இராசேந்திரனுக்குப் பிறகு அவன் மரபில் வந்தவன் சுந்தரேச பாதசேகரன் என்பான். நாட்டில் வரிப்பணத்தில் ஈட்டியவை கொண்டு சிவப்பணிக்கே செலவிட்டான். நாட்டுக்காவலுக்கு வேண்டிய சேனைகளைத் திரட்டவில்லை. படை பலம் குறைந்திருந்த அவனைச் சோழன் முற்றுகை இட்டான். 'ஆயிரத்துக்கு ஒரு வீரன்' என்று புகழப்பட்ட அச்சோழன் முன் இவன் நிற்க முடியவில்லை. இவன் இறைவனிடம் முறையிட அவர் 'அனைத்துக்கும் ஒரு வீரன்' என்று அறிவித்துக் கொண்டு வேடுவத்தலைவனாக வந்து அவர்களை விரட்டி அடித்தார். அவர்தலை மறைந்ததும் மறுபடியும் சோழன் வந்து தாக்கத் தொடங்கினான்.

இறைவன் சோழனுக்குத் தக்க அறிவு வரவில்லை என்பதால் அவன் அழிவிற்கு வழி செய்தார். இருவரும் மடு ஒன்றில் விழுந்து தவித்தனர். பாண்டியன் இறை அருளால் கரை ஏறினான்,சோழன் ஏறமுடியாமல் இறந்து ஒழிந்தான். மடுவில் வீழ்த்தி அவனை ஒழித்துக் கட்டினார். 

38. உலவாக் கோட்டை அருளிய படலம்

நல்லான் என்ற வேளாளன் ஒருவன் மதுரையில் வாழ்ந்து வந்தான். அவன் மனைவி பெயர் தருமசீலை என்பது இருவரும் விளைந்த நெல்லைக் கொண்டு இல்லை