பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



40. வரகுணனுக்குச் சிவலோகம் காட்டிய படலம்

வரகுணபாண்டியன் நல்லாட்சி செய்து நாட்டைக் காத்து வந்தான். வேட்டை ஆடக் காட்டை நோக்கிச் சென்றான்; இரவுப் பொழுதில் காட்டில் வழியில் படுத்து இருந்த பார்ப்பனன் ஒருவன் நித்திரை செய்ய அவன் மீது குதிரை தன் காலைப் பதித்தது. அவன் பரலோகம் சென்றான். அதனை அறிந்திலன். அரண்மனை அடைந்த அரசன் விழித்து எழுந்தபோது அந்தப் பார்ப்பனனின் உடலத்தைச் சுமந்து கொண்டு அவன் சுற்றத்தினர் அவன் முன்பு வைத்து நடந்தவைகளை எடுத்து உரைத்தனர். வேண்டிய பொருள் ஈடாகக் கொடுத்து அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தான். எனினும் பிராமணனைக் கொன்ற பாவம் அவனை விடுவதாக இல்லை. பிரம கத்தி அவனைப் பிடித்துக் கொண்டது. அவனை விடாமல் பின் தொடர்ந்தது.

சோமசுந்தரர் திருச்சந்நிதிக்குச் சென்று வழிபட்டு வருந்தினாள். கோயில் சுற்றி அங்கப் பிரதட்சணம் செய்து தன்னை வருத்திக் கொண்டான். பிரம்மகத்தி தீர என்ன என்ன தானங்கள் செய்ய வேண்டும் என்று பிராமணர்கள் கூறினார்களோ அவ்வளவையும் செய்து முடித்தான். தின்றது தான் மிச்சம்; கொன்றது அதன் பாவம் அவனை விடவில்லை. மீண்டும் சிவன் திருக் கோயில் சென்று முறையிட்டான்.

தவறு நினைந்து வருந்தினான். அவனை மன்னிப்பது தம் கடமை என முடிவு செய்து அசரீரி வாக்கால் அவனுக்கு வழி காட்டினார்.

"நீ உன்னை எதிர்த்த சோழராசனுடன் போர் செய்வாய்; அவனைத் துரத்திக் கொண்டு காவிரி நாட்டை