பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

திருவிளையாடற்புராணம்

கிளையில் ஏறி உட்கார்ந்து கொண்டது. தனக்கு விமோசனமே இல்லையா என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தது.

தான் இருந்த மரத்தின் அடியில் தவ முனிவர் ஒருவர் சீடர் சிலருக்குச் சிவத்தலங்களின் பெருமையைச் சொல்லிக் கொண்டிருந்தார். தீர்த்தம், தலம், மூர்த்தி இம் மூன்றாலும் சிறந்து பாவங்களைத் தீர்த்து வைக்கும் பரமன் இருக்குமிடம் மதுரைதான் என்று தெரிவித்தார். அங்குச் சென்று வழிபடுவோருக்குப் பாவ விடுதலை கிடைக்கும் என்றும் பயன் மிகுதி உண்டாகும் என்றும் கூறிக்கொண்டிருந்தார். அவற்றைக் கேட்கும் போதே அதற்குத் தன் சென்ற பிறவியின் நினைவுகளும் இப்பிறவியில் ஏற்பட்ட இடும்பைகளும் விளங்கின.

மதுரை நோக்கி விண்ணில் பயணம் செய்தது. வைகை நதி வந்ததும் வையகமே தன் கைக்கு வந்து விட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. பொற்றாமரைக் குளத்தில் முழுகி எழுந்து இறைவன் நற்றாளை வழிபட்டு மூன்று நாட்கள் தொடர்ந்து இச்செயல்பாட்டில் இறங்கியது. தவசிகளும் யோகிகளும் அரசர்களும் தேவர்களும் வழிபடும் காட்சியைக் கண்டு வந்த மீனாட்சி அம்மையாருக்குக் கரிக்குருவியின் செயல் வியப்பை தந்தது.

"இந்தக் கரிக்குருவியைப் பார்த்தீர்களா? இதன் செய்கை புதுமையாக உள்ளதே" என்றாள் மீனாட்சி அம்மை.

"தெரியும், அது முற்பிறவியில் செய்த தவறு இப்பிறப்பில் கரிக்குருவியாகிவிட்டது; கரிய நிறமுள்ள