பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

திருவிளையாடற் புராணம்


'கொங்குநேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழிஇய நட்பின் மயிலியற் செறியெயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே"

என்று எழுதி இருந்தது.

படித்துப் பார்த்தான்; பொருள் விளங்கவில்லை; அதனாலேயே அது கவிதையாகத் தான் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை பிறந்தது.

"தேனைத் தேடிச் சுற்றி வரும் வண்டே விருப்பு வெறுப்பு என்று ஒரு பக்கம் பேசாமல் உண்மையைச் சொல். பூக்களை நாடி அவற்றின் தரம் அறிந்து, தேன் உண்டு மயங்கி வருவது உன் பிழைப்பு. மலர்களின் மணம் அதைப் பற்றிய குணம் அனைத்தும் நீ அறிந்து பழகி உள்ளாய். மயிலின் சாயலும் முல்லை போன்ற பற்களும் உடைய என் காதலியின் கரிய நீண்ட கூந்தலையும் நீ அறிவாய், நறிய பூ அதனினும் உண்டோ? இருந்தால் சொல்க நீ" என்பது அதன் பொருள். அது அவனுக்குத் தெரியாது.

இதை எடுத்துக் கொண்டு புலவர் அரங்கு ஏறினான். சங்க மண்டபத்தில் இக்கவிதையைத் தங்கு தடையின்றிக் படித்தான்; அங்கு அமர்ந்திருந்த அரசனும் இப்பாட்டைக் கேட்டு உள்ளம் தடித்தான்; தன் மனத்தில் அலை மோதிக் கொண்டிருந்த சித்திரத்தை எழுது கோல் கொண்டு தீட்டியது போல் இருந்தது. "யான் நினைத்ததை, சொல்லக் கருதியதை இப்பாவலன் படைத்துக் காட்டினான். இந்த நாவலனுக்குப் பொற்கிழி கொடுத்தனுப்புக" என்று ஆணையிட்டான்.