144
திருவிளையாடற்புராணம்
"இந்த ஐயம் வந்திருக்கத் தேவையில்லை; மகளிர்க்கு மணம் சார்பு பற்றி வருவது; கூந்தலுக்கு இயற்கை மணம் இருந்தால்தானே ஒப்புமை கூறிப் பேசமுடியும்" என்றான் அவன்.
"மானிட மகளிர் கூந்தலுக்கு மணம் இல்லாமல் இருக்கலாம், தேவமகளிர்க்கு?" என்று கேட்டார்.
"அவர்களும் மந்தார மலர் அணிவதால் செளந்தரிய மணம் வீசுகிறது" என்றான்.
"பதுமினிப் பெண்களுக்கு?"
"எந்த மினுக்கிகளுக்கும் அப்படித்தான்" என்றான்"
"நீ வழிபடும் சோமசுந்தரரின் துணைவி மீனாட்சிக்கு"? என்று கேட்டார். "தான் ஆட்சி செய்தாலும் அவர்களுக்குத் தனி மணம் உண்டாகாது" என்றான்?.
"நீ யாரிடம் பேசுகிறாய் என்று தெரிந்து பேசு"
"முக்கண்படைத்த சிவன் என்பது அறிந்து தான் பேசுகிறேன்" என்றான்.
"அக்கண் கொண்டு எரித்து விடுவேன்" என்றான்
"நெற்றிக் கண் திறந்து அச்சுறுத்தினாலும் குற்றம் குற்றமே" என்றான்.
புலவனின் இறுமாப்பு அவனை வீழ்த்தியது. சிவனின் சினத்தால் அவன் வெந்து பொற்றாமரைக் குளத்தில் விழுந்தான். அவன் தவறு செய்தானா இல்லையா என்பதை இதுவரை யாரும் முடிவு செய்ய இயல வில்லை.