பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சங்கத்தார் கலகம் தீர்த்த படலம்

149


இப்புலவர்கள் தனித்தனியே பாடிய பாடல்கள் தரம் மிக்கவை; சில பொருள் சுவை சிறந்தவை; சில அணி நயம் சான்றவை; சில ஓசை நயம் கொண்டவை. புலவர்கள் படைத்த கவிதைகள் அவற்றைக் கேட்டுப் படிக்கும் சான்றோர்களின் நன் மதிப்பை ஒட்டிப் பாராட்டப் படுபவை ஆகும். அவர்களே தங்களுக்குள் தம் கவிதை தரம் சிறந்தவை என்று போட்டி போட்டுக் கொண்டு பேசுவது சரியன்று நாகரிகமும் ஆகாது; அவற்றின் தரம் அறிந்து மதிப்பீடு செய்யும் விமரிசகர்கள் அக்காலத்தில் இல்லை

புலவர்கள் அனைவரும் இறைவனிடம் வந்து முறையிட்டார்கள்; புலவர்கள் பலர் இருப்பினும் மதிக்கத்தக்க உயர் புலவர்கள் யார் என்று அறுதி இட்டுச் சொல்ல முடியவில்லை மெலும் மற்றவர்களின் தகுதியும் திறமையும் அறிய வாய்ப்பில்லை. தாமே எழுந்தருளி இதற்கு ஓர் முடிவு தர வேண்டும் என்று சடைமுடி தரித்த சுந்தரரை அழைத்தனர்.

கவிதையின் தரத்தை அறியக் கடவுள்கள் வர வேண்டும் என்றால் அவர்கள் மக்கட் கவிஞர் ஆகார்: மானுடன் மதிக்கத் தக்க கவிதைகளே மாண்புடையவை; இறைவன் வந்து இதில் இடம்பெறக் கூடாது என்பதை உணர்த்தச் செந்நிறம் மாறாத சிவனார் வழி கூறினார்.

"மதுரைநகரில் தனபதி என்ற வணிகன் இருக்கிறான், அவன் மனைவி குணசாலினி என்பவள்; அவர்களுக்குப் பிள்ளை இல்லாமல் தவம் செய்து ஒரு மகனைப் பெற்றிருக்கிறார்கள் உருத்திரசன்மன் என்பது அவன் பெயர்; ஐந்து வயதும் நிரம்பாத சிறுவன்; அவன் பிறவி ஊமை, பேச மாட்டான். அவனை அழைத்துச் செல்லுங்கள் அவன் உம்பாடலைக் கேட்டு முடிவு கூறுலான்" என்று சொல்லி அனுப்பினார்.