பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பரி நரியாகிய படலம்

169


"அடிக்காதீர்கள்" என்றார்.

"அடியாத மாடு படியாது" என்றான்.

"மனிதனை மனிதனாக நடத்துவதுதான் மரியாதை" என்றான்.

"உனக்கு என்ன மரியாதை வேண்டி இருக்கிறது; கொடுத்த வேலை செய்யவில்லை; மரியாதையாகத் தட்டைத் தலையில் வை; வெட்டியில் மண்ணைத் தோண்டு; கரை கட்ட முயற்சி செய்"

"எனக்கு அக்கரை இல்லை" என்றான்.

பிரம்பால் ஓர் அடி முதுகில் வைத்தான்; அடுத்த வினாடி அவன் தலையில் வைத்திருந்த கூடையோடு மண்ணைக் கரையில் போட்டு உரு மறைந்தான். கரை ஏறியது; கட்டி முடித்தாகி விட்டது; ஆனால் இறை அங்கு இல்லை.

பிரம்படி அவன் முதுகில் பட்டது; அது இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எல்லா ஜீவன்கள் மீதும் பட்டுப் பாண்டியனின் முதுகிலும் பட்டது. அவன் அருகில் இருந்த அமைச்சர் மீதும் பட்டது; சுவர்களில் உள்ள சித்திரங்களிலும் பட்டது;

பாண்டியன் தான் செய்த தவற்றை உணர்ந்தான். வந்தவர் சோமசுந்தரக் கடவுள் என்பதை அறிந்து வருந்தினான். தெய்வ வாக்கு வானில் எழுந்தது. பாண்டியன் செய்த தவற்றைச் சுட்டிக் காட்டியது.