பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

திருவிளையாடற்புராணம்


முடி செய்ய இவற்றைக் கொண்டு முடியும் என்று விவரித்தார். கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது என்பது பழமொழி. தெய்வமே உண்மையில் அவர்களைத் தேடி வந்ததை அவர்கள் அறிந்திலர்.

"அரசன் முடி செய்வதற்கு உம்மிடம் இரத்தினக்கல் உளவோ" என்று கேட்டனர்.

"உண்டு; அவற்றை வாங்க உம்மிடம் கோடி பொன் உளவோ" என்று கேட்டார்.

"பொன் உண்டு மணி இல்லை" என்றார்கள். சேர்ந்து அமைதல் அரிதுதான்.

அவ்வணிகர் கரிய நிறத் துண்டை விரித்து வைரமும் முத்தும் மணியும் மற்றும் உள்ள ஒளிமிக்க நவரத்தினமும் காட்டி வேண்டுவன எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.

கிரீடத்திற்கு வேண்டிய கற்களைப் பொறுக்கிக் கொண்டனர்.

சோமசுந்தரக் கடவுளிடம் இவற்றைக் காட்டி இதை அணியும் அரச மகன் ஆயுளும் ஆட்சியும் பெற்று மாட்சி பெறுக" என்று கூறி வாழ்த்திக் கொடுத்தார். அவற்றிற்கு உரிய பொன்னை எடுத்துக் கொடுக்க முயன்ற போது மின்னல் வேகத்தில் அவ்வாணிபர் மறைந்து உமையொரு பாகனாகக் காட்சி அளித்துத்திருக்கோவிலில் மறைந்தார்.

வாணிகனாக வந்தசோமசுந்தரர் அவனுக்கு அபிடேக பாண்டியன் எனப் பெயரிடுமாறு கூறிச் சென்றார். அவ்வாறே அவனுக்கு அத்திருப்பெயரைச் சூட்டி அவனி ஆளும் வேந்தனாக ஆக்கினர்.