பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யானை எய்த படலம்

75

மதம் கொண்ட யானை ஊழித்தியெனப் புறப்பட்டு வந்தது. அதன் வேகத்தையும் சீற்றத்தையும் கண்டு பாண்டியனின் படையினர் அஞ்சி அதனை எதிர்க்க முடியாது என்பதால் ஓடி ஒளித்தனர். பாண்டியனிடம் பதை பதைப்போடு இச் செய்தியைப் பகர்ந்தனர். விக்கிரமன் தன்னால் அதனை எதிர்த்து ஒழிக்க முடியாது என்பதை அறிந்தவனாய்க் காத்தற் கடவுளாகிய சோமசுந்தரரிடம் சென்று முறையிட்டான்.

அவன் குறை கேட்ட இறைவன் தான் அதனைக் கொல்வதற்கு ஓர் உதவி செய்ய வேண்டும்; உயர இருந்து அம்பு எய்வதற்கு ஏற்றபடி, அட்டாலை மண்டபம் ஒன்று கட்டித் தரக் கேட்டான். பதினாறு தூண்களை உடைய அம்மண்டபம் தற்காப்புடையதாக அமைந்தது.

வில்லைக் கையில் ஏந்தி அம்பறாத்துாணியை முதுகில் தாங்கிக் கரு நிறமுள்ள காளைப்பருவத்து வில் வீரனாக இறைவன் வந்து தோன்றி அம்மண்டபத்தின் மீது ஏறி யானை வரும் திக்கில் நின்று நரசிங்க அத்திரத்தை யானை மீது தொடுத்தார். அது இரணியனைப் போலக் கதறிக் கொண்டு விழுந்தது. அந்த நரசிம்ம வடிவத்தோடு அந்த அம்பு அங்கு நிலைத்து விட்டது. முனிவர்கள் பலர் வந்து வழிபட்டனர். பிரகலாதனும் அங்குவந்து தவம்,செய்து மேன்மைகளைப் பெற்றான் என்று கூறப்படுகிறது. 

23. விருத்த குமார பாலரான படலம்

விக்கிரமன் ஆட்சி செய்து வரும் நாளில் மதுரையில் விருபாக்கன் என்னும் வேதியன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி சுபவிரதை; இருவருக்கும் நெடுங்காலம் குழந்தைகளின்றிப் பின் தான தருமங்கள் செய்ய