பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124


124 ஈடுபட்டுப் பெண்மையை விரும்பி மற்ருெரு பிறப்பில் ஆயமங்கையர்களாகிக் கண்ணனைக் கூடினர் என்ற வழக்கு ஒன்று உண்டு. ஆனல், ஆழ்வார்கள் அப்படியின்றி அப்பொழுதே பெண்மை நிலையை யடைந்து எம்பெருமானகிய புருடோத்தமனே அது 1.விக்கக் காதலிக்கின்றனர். நம்மாழ்வார் போன்ற ஞானச் செல்வர்களிடத்தில் சில சமயம் ஞானம் தலை துரக்கி நிற்கும்; சிலசமயம் பிரேமம் (காதல்) மீதுார்ந்து நிற்கும். இந்த இரண்டு நிலைகளிலிருக்கும்பொழுதும் அவர்கள் பாசுரங்கள் அருளியுள்ளனர். இதனை, "ஞானத்தில் தம்பேச்சு; பிரேமத்தில் பெண்பேச்சு" என்று ஆசாரிய ஹிருதயம் என்ற நூல் குறிப்பிடும். அஃதாவது, ஞான நிலையிலிருக்கும்பொழுது அவர்கள் தாமான தன்மையிலே நின்று பேசுவர். பிரேம நிலையிலிருக்கும் பொழுது பெண் தன்மையையடைந்து வேற்று வாயாலே பெண்பேச்சாகப் பேசுவர். அப்போது நம்மாழ்வாருக்குப் பராங்குசர் என்ற ஆண்மைப் பெயர் நீங்கிப் பராங்குச நாயகி என்ற பெண்மைப் பெயரும், திருமங்கையாழ்வாருக்குப் பரகாலர் என்ற ஆண்மைப் பெயர் நீங்கிப் பரகால நாயகி என்ற பெண்மைப் பெயரும் வழங்கப்பெறும். இங்ங்னம் ஆழ்வார்கள் பெண்மை நிலையிலிருந்து கொண்டு எம்பெருமானை அநுபவிக்கும் பொழுது, அவர்கள் தோழி, தாய், தலைவி என்ற மூவருள் ஒருவரின் தன்மையைத் தாம் அடைந்து கூற்றுகள் நிகழ்த்துவர். இதன் காரணமாகப் பாசுரங்களும் தாய் சொல்வது போல வடிவெடுத்துத் தாய்ப் பாசுரம்' என்றும், தோழி 160. ஆசாரிய ஹிருதயம்-குத்திரம், 118,