161
161
தரங்கம் பரமபதம் வேங்க
டேசர்க்குத் தானங்களே.
(தானங்கள் இடங்கள்)
- 316
இதில் சோழநாட்டுத் திருப்பதிகள் நாற்பதில் சேர்ந் தவை திருவரங்கம்,திருக்குடந்தை, திருக்கண்ணமங்கை, திருநறையூர், திருக்கண்ணபுரம், திருக்கண்டியூர், திருத்தஞ்சை என்பனவும்; பாண்டி நாட்டுத் திருப்பதி கள் பதினெட்டில் சேர்ந்தவை திருக்குறுகூர், திருக்குறுங் குடி, திருமாலிருஞ்சோலைமலை, திருப்புல்லாணி, திரு மெய்யம் என்பனவும்; தொண்டை நாட்டுத் திருப்பதி கள் இருபத்திரண்டில் சேர்ந்தவை திருவட்டபுயகரம், திருக்கடன்மல்லே, திருக்கச்சி என்பனவும்; வடநாட்டுத் திருப்பதிகள் பன்னிரண்டில் சேர்ந்தவை திருப்பாற் கடல், திருநாடு என்பனவுமாகப் பதினேழு திருப்பதிகள் கூறப்பெற்றிருத்தல் கண்டு மகிழத்தக்கது. அய்யங்கார் அவர்களின் அகத்துறை அமைந்த இன்னொரு பாசுரத்தில் ஆழங்கால் படுவோம். இது "தலைவி செவிலியர்க்கு அறத்தொடு நிற்றல் என்னும் துறையின்பாற் பட்டது. 'உண்டமருந் துகைக்கும் அன்னமீர் மதனே ரைந்தம்பும் கொண்டமருந் துகைக்குக் குறுகாமுனம் கொவ்வைச் செவ்வாய் அண்டமருந் துகைக்கும் திறந்தான் அப்பன்போற் பளியும் எண்தமருக் துகைக்கும் பொடிகாப் பிடுமின் என்தனக்கே.' 16. பாடல்-56 17. பாடல்-51 திரு.-}}