191
191
என்ற அடிகளில் விண்ணை எட்டுமாறு வளர்ந்துள்ள பாக்கு மரங்கள் உம்பருலகத்துக் கற்பகச் சோலையாகிய பந்தலுக்கு நாட்டப்பெற்ற அழகிய கால்கள் போல் காட்சி யளிப்பது கூறப்பெறுகின்றது. அப்பாக்குமரத்தில் வெடித்த நிலையிலுள்ள வெண்ணிறப்பாளைகள் வெங்கதி ரோனுக்கு அசைக்கப்பெறும் வெண்கவரிபோல் காட்சி அளிக்கின்றன. .
"தண்கமுகின் பாளை தடங்கதிரின் செல்வனுக்கு
வெண்கவரி போலசையும் வேங்கடமே."
(கதிரின் செல்வன் - சூரியன்)
என்று கூறுவர் திவ்விய கவி. முழுமதியம் வானத்தில் இறுமாந்து உலவுகின்றது. அப்பொழுது அருகில் செல்லும் மதயாணையொன்று அத்திங்களை இனிய பாலில் கலந்த உணவுத் திரளை என்று கருதித் துதிக்கையை நீட்டிய வண்ணம் உள்ளது." - ---
நான்காவதாக வேங்கட மலையின் வேறு சில காட்சி களிலும் ஆழங்கால் படுவோம். வேங்கடமலையிலுள்ள தென்னை மரத்தில் வெண்மையான பாளே மலர்ந்து கிடக்கின்றது. சுனை நீ ரி லு ள் ள மீன்கூட்டங்கள் அதனைக் கொக்கு என்று கருதி நீரினுள் அஞ்சி மறை கின்றன. தென்னை மரத்தினின்றும் இளநீர்க் காய்கள் கீழே வீழ்தலால் அம்மலையிலுள்ள இரத்தினங்கள் சிதறுகின்றன. செந்நிறமுள்ள அவற்றை நெருப்பென்று கருதி யானைகள் விலகிச் செல்லுகின்றன." வேங்கடமலை
87. பாடல் - 37
88. பாடல் - 31 89. பாடல் - 27 90. mu-si - 29