பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

213


243 மாயினும், பாவினங்களினுமாயினும், இவற்றில் கலந்து வரும் துறைப் பொருள்களிலாயினும் தொடர்பு என்பதே இராது. அந்தாதித் தொடர்பு மட்டிலும் பாக் களிடையே அமைந்திருத்தலைக் காணலாம். உறுப்பு களிலோ, பாக்களிலோ எதன்பின் எது என்ற தொடர்பும் இருப்பதில்லை. கலம்பகம் பாடுங்கால் தேவர்க்கு நூறும்; அந்தணர்க் குத் தொண்ணுாற்றைத்தும், அரசர்க்குத் தொண் ணுாறும், அமைச்சர்க்கு எழுபதும், வணிகர்க்கு ஐம்பதும், வேளாளர்க்கு முப்பதும் என்ற எண்ணிக்கையில் பாக்கள் அமையப் பாடுதல் வேண்டும் என்பது நூல் விதியாகும். இந்த வரம்பிலும் கலம்பக நூலார் நின்றதாகத் தெரிய வில்லை.மதுரைக் கலம்பகம் 102 செய்யுட்களும், சிவஞான பாலய தேசிகர் கலம்பகம் 93 செய்யுட்களும், சைன நூலாகியதிருக்கலம்பகம் 120செய்யுட்களும், அரசனகிய நந்திவர்மன்மீது பாடப்பெற்ற நந்திக் கலம்பகம் 100 செய்யுட்களும் ஆக செய்யுட்களின் எண்ணிக்கை வரம் பிலும் மாறுபட்டிருத்தலைக் காணலாம். கலம்பகப் பயன் : இங்ங்ணம் கலம்பகம்’ என்ற நூல் பாடுவதால் பயன் தான் என்ன? ஊகித்துச் சொன்னல் அது பொழுது போக்குக்காகவே பாடப்பெற்ற நூல் என்றே தோன்று கின்றது. பல கலம்பகங்கள் கடவுள்மீது பாடப்பெற் றுள்ளன என்பது உண்மையே. ஆயினும், அவை அன்பினே வளர்ப்பனவாக அமையவில்லை. கலம்பக உறுப்புகளும் பிற அகப்பொருள் கருத்துகளும் இன்றித் தோத்திர நிலையில் உள்ள பாக்களே அன்பை வளர்ப்பனவாக அமைந்துள்ளன. சில கலம்பகங்கள் எல்லாப் பாக்களி