பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264


264 சால முளைக்கும் சீற்றமெனும் தழலை யவிக்க நின்மார்பில் கோலம் பொலிய வீற்றிருப்பாள் கொற்றம் வளர்க பல்லாண்டு.” இதில் எம் பெருமாட்டியின் புருஷகாரம் (தகவுரை) குறிப்பிடப் பெற்றிருப்பதைக் காணலாம். “நீரிலே நெருப்புக் கிளருமாப் போலே, குளிர்ந்த திருவுள்ளத்திலே அபராதத் தால் சீற்றம் பிறந்தால் பொறுப்பது இவளுக்காக. " என்ற முமுட்சுப்படியின் வாக்கியத்தை நினைந்த வாறு இப்பாடல் கவிஞரின் உள்ளத்தில் அரும்பியிருக்க வேண்டும். ஆண்டாள் திருப்பாவையின் பாணியில் எழுந்த 'திருப்பாவை யில் இந்த ஆசிரியரின் இரண்டு பாசுரங் களைக் காண்போம். y 'வேங்கடத்து மேவும் விமலன்; அருச்சுனர்க்குப் பாங்குடைய கீதை பகரும் பரஞ்சோதி; தேங்கமழுங் தண்டுளவத் தேவன் வடிவாகி ஓங்குபுகழ்க் கோதை யுவக்கும் தமிழ்புன்ந்து தீங்கவிஞர் நெஞ்சிற் சிறக்கும் கலம்வழங்கி வாங்கரும்கீர் மார்கழி வந்ததுகாண் நேரிழையீர்! தீங்ககல ஞாலத் திருமலையின் பேர்பாடி ஈங்குயர்த்தும் நோன்பை யியற்றுவோம்; எம்பாவாய்!” ஆண்டாள் திருப்பாவையில் பாவை நோன்பு இயற்றுவதற்காக நீராடப் போதுவீர் என்று குறிப்பாக 256 முமுட்சுப்படி-127.