பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284


ు : శ్లో 2.84 திருமகள் தன்ளுெடும் தினத்து மகிழ்வோய்! திருமலை தன்னில் திருப்பதி கொள்வோய்! திருவேங் கடவா தேவனே! மங்களம்' என்ற பாடலில் இதனைக் காணலாம். பொதுவாக இந்த நான்கு வடமொழி நூல்களிலும் ஆழ்வார் பாடல்களின் செல்வாக்கு நிழலிடுகின்றது. வடமொழிப் பயிற்சி இல்லாதவர்கள் தமிழ்க் கவிதை வடிவத்தில் திகழும் 'திருவேங்கடவன்மாலை என்ற நூலைப் பக்தியுடன் படித்து அநுபவிக்குங்கால் இந்த உண்மை அவர்கள் உள்ளத்தில் பளிச்சென்று தோன்றுவதை அறிவார்கள். இந்தத் தமிழ்ப் பாடல்களின் அருமையை "சீர்தோறும் தெய்வத் திருமணக்கும் பாமாலை யார்வாயும் தேன்பாய்ச்சும் யாழிசையாய்ப்-பார்போற்றும் செந்தமிழைப் போலச் சிறந்தோங்கிப் பாடியவர் சந்ததமும் வாழ்க தழைத்து. ' என்ற இனிய வெண்பாவால் அறிந்து மகிழலாம். இறுவாய் எங்கோ பிறந்து எங்கோ வாழ்ந்து ஒராண்டுப் பருவத்தில் தந்தையை இழந்து அன்னையின் அரவணைப்பி லிருந்துகொண்டு வளர்ந்து இறையருளால் உயர்கல்வி பெற்றேன். அறிவியல் கல்வியில் அதிகநாட்டங்கொண்டு பயின்றேன். இன்றும் அத்துறையில் உள்ள நாட்டம் 280. என் அருமை மாளுக்கர் திரு. ரெ. சிங்கார வடிவேலன் பாடியது. (தேவகோட்டையிலுள்ள கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்று பவர்). - -