உறக்கம்-கவலையற்ற உறக்கம் அவரை ஆட்கொண்ட தென்றால் அவர் மனத்துணிவுக்கு வேறு சான்றும் தேவையோ!
இதுவன்றோ அவர் கலங்காத நெஞ்சத்திற்குச் சிறந்த அத்தாட்சி?
காலை ஆறு மணிக்கு எழுந்தார் வைக்கம் வீரர்.
‘மழை பெய்தது தெரியுமா?’ என்று நண்பரை வினவினார் திரு.வி.க.
‘மழையா!’ என்றார் நாயக்கர்,
எப்படி?
கொள்ளத் தக்கன
கொள்ளத் தக்கன, போற்றத் தக்கன எங்கேயிருந் தாலும் ஏற்க சிறிதும் தயங்க மாட்டார் திரு.வி க. அவருக்குப் பெருமை தருவதும் அஃதே.
வைக்கம் வீரர்
வைக்கம் சத்தியாகிரகத்தின் போது பெரிய சர் நடத்திய தீண்டாமைப் போராட்டம் பற்றி வைக்கம் வீரர் என்று தலைப்பீந்து “நாயக்கரின் தியாகத்தை வியந்து, வியந்து ‘நவசக்தி'யில் வெளி வந்த எழுத்தோவியங் களை யாரே மறக்க முடியும்? மறுக்க முடியும்?
எவரேனும் இவைகளை ஒன்றுமில்லை சும்மா’ என்று உதாசீனமாகத் தள்ளி விட முடியுமா?
‘குடியரசு விட்ட சொல்லம்புகள் எத்தனை, எத்தனை!
அவ்வாறிருந்தும், வைக்கம் வீரர் பற்றி ஆணித்தரமாக எழுத இவரால் எவ்வாறு முடிந்தது?
12 I