பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“பிரபுக் கூட்டத்தின் தன்னலச் செயல்களால் விளைந்த தென்ன? விளைவு முதலாளி-தொழிலாளி போராட்டமே யாகும். மேல் நாடு தற்போது முதலாளி-தொழிலாளி போராட்டத்துக்கு இரையாகி வருதல் கண்கூடு. மேல் நாட்டில் உலகாயதப் புதுமை என்றும் சர்வாதிகாரமென்றும் விலங்கியல்புகள் வீறிடுகின்றன. அந்நாட்டின் செல்வங்கள் பெரிதும் குண்டு பீரங்கிகளுக்கே செலவாகின்றன. அந்நாட்டின் போராட்டம் உலக முழுவதும் பரவி வருகிறது.

‘யான் கிறிஸ்துவப் பள்ளிக்கூடத்தில் பயின்று வந்த போது, சுவிசேஷ மொழிகளைப்படித்ததுண்டு; மனப்பாடம் செய்ததுமுண்டு. கிறிஸ்து பெருமான் மலைப் பொழிவைப் பன்முறை யான் பாராயணஞ் செய்திருக்கிறேன்...”*

கிறிஸ்துவின் பெயரால் சொல்லப்படுவன எல்லாம் கிறிஸ்துவின் அறமாகா. கிறிஸ்துவின் பெயரை மட்டும் ‘உதட்டில் முழக்கிக் கிறிஸ்துவுக்கு மாறுபட்ட செயல்களை நிரப்பும் புரோகித மதத்தைக் கிறிஸ்து மதமென்று கருதுவது தவறு... புரோகித மதத்தைத் தொலைக்கவே கிறிஸ்து பெருமான் தோன்றினார். வேதபாரகர், பரிசேயர், சதுசேயர் முதலியவர்கள் கடவுள் பெயரால் அனுப்பித்து வந்த சம்பிரதாய வழக்க ஒழுக்கங்களையும், தேவாலயங்கள் கள்ளர் குகைகளாக மாறியதையும் கடிந்து, கிறிஸ்து நாதர் நிகழ்த்திய அறச் செயல்களைக் கூர்ந்து நோக்குவோர்க்குப் புரோகித மதம் வேறு என்பதும் கிறிஸ்து நெறி வேறு என்பதும் நன்கு புலனாகும்.*

இக்கால பிஷப்புக்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்கள் பைபிள் படிக்கிறார்கள்; சுவிசேஷப் பிரசாரஞ் செய்

  • தமிழ்ச்சோலை அல்லது கட்டுரைத் திரட்டு-முதற்

பகுதி, 24-12-1930. * தமிழ்ச்சோலை அல்லது கட்டுரைத் திரட்டு,

23-12-1931.

I 83