3
அலைபாயும் உலகிற்கு அரு மருந்து
திருக்குறள் பாயிரமும் இல்லறமும்
திரு.வி.கவின் திருக்குறள்-விரிவுரை ஆராய்ச்சி
திருக்குறள் மிகப் பழமையான நூல்களில் ஒன்று. இரண்டே அடிகளில் மிகப் பெரிய உண்மையை எடுத்துக் கூறும் ஒர் அறநூல். இந்த குறளுக்கு உரை வழங்கியவர் பரிமேலழகர் போன்றோர். திரு.வி.க உரைக்கும் பரிமேலழகர் உரைக்கும் உள்ள வேற்றுமை யாது?
திரு.வி.க வின் திருக்குறள் விரிவுரை தற்காலத்துக்கு ஏற்றபடி அமைந்திருப்பதே வித்தியாசம். அது மட்டுமா? இயந்திர காலத்திற்கும் அணுகுண்டு, விண்வெளி யுகத் திற்கும் ஏற்றவாறு விரிவுரை திரு.வி.க தவிர வேறு யாரே தரவல்லார்?
திருக்குறளை மட்டும் திரு.வி.க தேர்ந்தெடுப்பானேன்? வேறு நூல்களில்லையா? இது அடுத்த கேள்வி,
திருக்குறள் மட்டும் ஏன்?
வேறு நூல்கள் உண்டு. ஆனால் உலகிற்கே ஒத்தவாறு இருப்பது திருக்குறள். அது எந்நாட்டவர்க்கும், எக்காலத் திற்கும் பொருந்தும்; அது மட்டுமல்ல, எம்மொழியும்
8