பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறையாகக் கண்டார்; வாய்மையின் பேரொளியாகக் கண்டார்.

தங்குற்றங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு, தம்மைத் திருத்திக் கொள்ளும் இயல்பு கொண்ட உயர்ந்த மனிதனாகக் கண்டார்.

நன்றி மறவாத நற்பண்பாளனாகக் கண்டார். பெண்மையைப் போற்றும் பெருந்தகையாகக் கண்டார்.

எவ்வுயிரும் தன்னுயிர் என நலம் பேணும் நல்லாராகக் கண்டார்;

அயர்வில்லா பணி செய்யும் பற்றற்ற உண்மைத் துறவி யாகக் கண்டார்.

பலனே பாராத, பாரதமே உயிர் எனக் கொண்ட சத்திய மூர்த்தியாகக் கண்டார்.

‘வாழ்க காந்தீயம்; வாழ்க என்றும்! என வாழ்த்து கூறு கிறார்.