பக்கம்:திரு. வி. க.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii

இயன்ற, அளவு ஒரு திறனாய்வு எழுத வேண்டுமென்று நினைத்திருந்தேன். பல்கலைக் கழகத்தார் இத்தகைய ஒரு வாய்ப்பை அளித்தபோது என்னுடைய இந்த எண்ணம் வடிவு பெறத் தொடங்கியது. கல்கி உருவாவதற்கு ஒரு பெருங் காரணமாக இருந்த பெரியாரின் வாழ்க்கையை, அவருடைய நூல்களைப் பற்றிய திறனாய்வை கல்கி நினைவுச் சொற்பொழிவாகச் செய்வது முற்றிலும் பொருத்தமுடையதே என்று கருதி இத் தலைப்பை மேற்கொண்டேன். -

மூன்று நாள்களில் செய்யப்பெற்ற இச் சொற்பொழிவுகள் முறையே திரு.வி.க.வின் தமிழ்த்தொண்டு’, ‘திரு. வி.க.வின் அரசியல்’, ‘தமிழ் அறிஞர் திரு. வி.க என்ற மூன்று தலைப்புகளில் செய்யப்பெற்றன.

அச் சொற்பொழிவின் நூல்வடிவமே இது. பதிப்பித்த கங்கை புத்தக நிலையத்தார்க்கு என் நன்றி.

ஆசிரியன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/10&oldid=695384" இலிருந்து மீள்விக்கப்பட்டது