திரு. வி. க. இ. 199
1945இல் புதுமை வேட்டல் கிறிஸ்துவின் அருள் வேட்டல் 1947இல் சிவனருள் வேட்டல் 1948இல் கிறிஸ்துமொழிக் குறள் 1950இல் இருளில் ஒளி அருகன் அருகே அல்லது
விடுதலை வழி இருமையும் ஒருமையும் 1951இல் சித்தந் திருந்தல் அல்லது செத்துப் பிறத்தல்
முதுமை உளறல் பொருளும் அருளும் அல்லது மார்க்கிலமும் காந்தியமும் 1953இல் வளர்ச்சியும் வாழ்வும். 1931இல் எழுந்த உரிமை வேட்கை என்ற நூலிலிருந்து ஒரு பாடல் இதோ: இதில் அவருடைய தாய்மொழிப் பற்று விளங்குகிறது. “வடிவினிலே பெரியள்யான் வயதினிலே பெரியள்;
வளத்தினிலும் வண்மையிலும் மக்களிலும் பெரியள்: கடியரணில் மலையரணில் கடலரணில் பெரியள்;
காவினிலே தளைவந்த காரணந்தா னென்னே? படியினிலே இல்லாத பாழான சாதி -
பகுப்புடனே, தீண்டாமை, பாவையர்தம் அடிமை கொடியஇவை குடிகொண்டு கொடிகொடியாய்ப் படர்ந்தே
கொல்லவுடன் பிறப்பன்பைக் குலைத்ததென்றன்
வாழ்வே.” 1938இல் எழுந்த திருமால் அருள் வேட்டலிலிருந்து ஒரு பாடல், இதில் சிறந்த ஓசை நயம் அமைந்துள்ளது:
“தொன்மையில் மிகுந்த துவரையை யாண்ட
சோதியே சுடர்விளக் கொளியே
- நாட்டுப்பாடல், பக்கம் 16; பாடல் 9.