பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 மு. பரமசிவம் :

இயலவில்லை. திரும்பவும் அவர் பத்திரிகை ஆபீசில் உதவியாளராகப் பணிபுரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அக் கால கட்டத்தில், ஈடு இணையற்ற நட்சத்திர மாக ஒரு காலத்தில் ஜொலித்த எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றையும், தன்னே ரில்லாத் தனிப் பெரும் நடிகரான எம்.ஆர். ராதாவின் வாழ்க்கை அனுபவங்களையும் எழுதி விந்தன் வாசகர்களுக்கு சுவாரசியமான விருந்து அளித்தார்.

அவற்றின் சிறப்பைப் புலப்படுத்தும் விதத்தில் அவை பற்றியும் உரிய முறையில் மு.பரமசிவம் இந் நூலில் நினைவு கூர்ந்திருக்கிறார்.

இவ்விதம் பல தன்மைகளிலும் வரவேற்புக்கும் பாராட்டுதலுக்கும் உரிய ஒரு வரலாற்று நூலாக அமைந்திருக்கிறது இது.

இது வாசகர்களுக்கு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தரும் என்பதில் சந்தேகமில்லை.

10,வள்ளலார் குடியிருப்பு வல்லிக்கண்ணன் புதுத்தெரு, லாயிட்ஸ் சாலை சென்னை - 600 005