பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 111

அட கடவுளே... என் உடைவாள்கூட

ஆற்றோடு போய்விட்டதே.

பொன்னனும், விக்கிரமனும் மறைவிலிருந்து மாரப்பனும், பைரவனும் பேசிக் கொண்டு இருப்பதைக் கவனித்துக் கேட்டுக்கொண்டி ருக்கின்றனர். கபால பைரவன், மாரப்ப பூபதியிடம் விக்கிரமனையும் சிவனடியாரையும் பிடித்து வருமாறு கூறுகிறான். பிறகு அவர்கள் போகிறார்கள்.

தன் உடைவாள் ஆற்றோடு போய்விட்டதை விக்கிரமன் பொன்ன்னிடம் கூற, பெட்டியின் நினைவு வருகிறது பொன்னனுக்கு. மறுதினம் எடுத்துக் கொள்ளலாம் என்று கூ விக்கிரமனைப் படுக்கச் செய்கிறான் பொன்னன்.

காலையில் விக்கிரமனுக்கு ஜூரம் கண்டு விடுகிறது. ஆகவே வைத்தியரை அழைக்க ஓடுகிறான் பொன்னன். அப்போது அவ்வழியே குந்தவியும், அவள் அண்ணன் மகேந்திரவர்மனும் விக்கிரமனை அழைத்துச் செல்கிறார்கள்.

பொன்னன் இதைப் பார்த்து விடுகிறான். அவன் சிற்பியின் வீடு செல்ல, அங்கிருந்து சிவனடியார் வெளிப்பட்டுப் பொன்னனை வரவேற்கிறார். சிவ: வா பொன்னா... வா... மகாராணியைப் பற்றி

ஏதாவது தகவல் தெரிந்ததா? பொன்: தெரிஞ்சுது சாமி, திருவெண்காட்டு அம்மையும், வள்ளியும் பாத்த ஒத்தைக் கை மனுஷனை நானும் பார்த்தேன்.