பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

  • திரையுலகில் விந்தன் 113

ஆனால் அங்கே போவதற்கு முன்னால் நான் உறையூருக்குப் போகவேண்டும். பொன்: ஏன்? சிவ: இளவரசர் வந்திருக்கிறார். என்ன பொன்னா, நான் சொல்வதில் உனக்கு நம்பிக்கை யில்லையா?

பொன்: உங்க பேச்சிலே எனக்கு நம்பிக்கை யில்லாமப் போகுமா? அவர் வந்தது உங்களுக்கு எப்படித் தெரியும். சிவ: வந்தது மட்டுமல்ல, வழியில் அவருக்கு ஏதோ விபத்து நேர்ந்திருக்கிறது என்பது மட்டும் எனக்குத் தெரியும். அதோ அந்தக் குதிரைக்கு பகவான் பேசும் சக்தியை மட்டும் அளித்திருந்தால் அது சொல்லும்... அது போகட்டும், நீயும் என்னோடு உறையூருக்கு வருகிறாயா? பொன் வர்றேன் சாமி. ஆனா அதுக்கு முன்னாலே

சில விஷயங்கள் தெரியணும். சிவ: என்ன?

பொன். நீங்க நிச்சயமா யாருன்னு எனக்குத் தெரியணும். கொஞ்ச நேரத்துக்கு முன்னாலெ சாலை வழியா குதிரை மேலே வரும்போது வேறு உருவத்திலே வந்திங்க. இப்போது வீட்டை விட்டு வெளியிலே வர்ற போது வேறே உருவத்திலே வந்து நிக்கிறீங்க. இந்த இரண்டு உருவமும் உங்களுக்குச்

தி.வி. -8