பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 மு. பரமசிவம் :

சொந்தமான உருவமில்லேன்னு எனக்குத் தோணுது. உண்மையிலே நீங்க யாருன்னு எனக்குச் சொல்லணும். சிவ: சொன்னால் என்ன? பொன்: சொன்னா நீங்க அவசியம் தெரிஞ்சிக் கொள்ள வேண்டிய விஷயம் எனக்குத் தெரியும். அதைச் சொல்லுவேன். இல்லாட்டி என் வழியே போவேன். சிவ: அவசியம் நீ தெரிந்து கொண்டு தான் தீர

வேண்டுமா? பொன்: ஆமாம் சாமி. சிவ: சொல்கிறேன். ஆனால் நீ எனக்கு ஒரு வாக்குறுதி கொடுக்க வேண்டும். யாரிடமும் சொல்லக் கூடாது. பரம ரகசியமாய் வைத் திருக்க வேண்டும். பொன் ஆகட்டும் சாமி. சிவ: போர்க்களத்தில் வீரமரணமடைந்த பார்த்திய மகாராஜா மீது ஆணையாகச் சொல்லுவாயா? பொன். பார்த்திப மகாராஜா ஆணையாகச்

சொல்லுகிறேன். சிவ: அப்படியானால் பொன்னா, இதோ பார்!

தன் சடாமுடியை அகற்றிக் காட்டுகிறார். பொன்னன் திகைக்கிறான்.

பொன். ஆ. தாங்களா பிரபு.