* திரையுலகில் விந்தன் 115
சிவ: ஆம் பென்னா! இப்போதாவது சொல். உனக்குத் தெரிந்த ரகசியம் என்னவென்று இப்போதாவது சொல்.
பொன்: இனிமே சொல்றதுக்கு என்ன சாமி? இங்கிருந்து காட்டாற்று வெள்ளத்திலே சிக்கிக்கிட்டாரு. கரை சேர முடியாம தவிச்சிக் கிட்டிருந்த அவரை நான்தான் கரை சேத்தேன். அன்னைக்கு ராத்திரியே அவருக்கு காய்ச்சல் வந்துட்டுது. வைத்தியரை அழைச்சுக்கிட்டு வர்றதுக்காகப் பக்கத்துக் கிராமத்துக்குப் போனேன். அந்த வழியா வந்த இளவரசி தன்னுடைய பல்லக்கிலே இளவரசரையும் ஏத்திக்கிட்டுப் போயிட்டாரு.
சிவ: அப்படியானால் இளவரசரைப்பற்றி கவலை நமக்கு வேண்டாம். அருள்மொழி தேவியை தேடிப் பிடிப்போம் வா.
சிவனடியார் செல்ல பொன்னனும் பின் தொடர்கிறான்.
குந்தவியின் யோசனைப்படி சிவனடியாரும் பொன்னனும் கபால பைரவனின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்துவிட முயற்சிக்கிறார்கள். ஆனால் சிவனடியார், மாரப்ப பூபதி மூலம் விக்கிரமனுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படும் என்று பொன்னனிடம் கூறி, உடனடியாக அவன் ஊர் திரும்பும்படிக் கூறிச் செல்கிறார்.
பொன்னன் இளவரசனைச் சந்தித்து, வசந்தத் தீவுக்குச் சென்று புதைக்கப்பட்டிருந்த பெட்டியை எடுத்துத் தருகிறான். குந்தவியிடமிருந்து தப்பி வந்த