இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
118 மு. பரமசிவம் :
குந்:
விக்:
குந்:
குந்:
குந்:
இது உண்மையானால் என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் ஓடப் பார்த்தீர்களே. அது எப்படி?
தவறுதான். அதற்குக் காரணம் நீ விடை கொடுக்காவிட்டால் போக முடியாதே என்ற எண்ணந்தான். நீங்கள் போவதை நான் ஏன் தடுக்க வேண்டும்...? உங்களுடைய கடமையைச் செய்வதற்கு நான் ஏன் குறுக்கே நிற்க வேண்டும்?
- ே நான் எண்ணியது பிசகு என்று இப்போதுதான்
தெரிகிறது... உன்னிடம் நான் எல்லாவற்றையும் முன்பே சொல்லியிருக்க வேண்டும். சொல்லியிருந்தால் நான் படகை அவிழ்த்து விட்டிருக்க மாட்டேன்.
இப்போது நான் உன்னிடம் தைரியமாக விடை
கேட்கிறேன். இந்த நதியைத் தாண்டுவதற்குப் படகும், தாண்டிய பின் மாமல்லபுரம் போவதற்குக் குதிரையும் கொடுத்துதவ வேண்டும். கொடுக்கிறேன். ஒரு நிபந்தனை. என்ன நிபந்தனை? போன தடவை போனது போல் என்னைக் கரையில் விட்டு... நீங்கள் மட்டும் கப்பலில்