பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 133

குந்:

நர:

மணக்க விரும்பினால் அதற்குக் குறுக்கே நான் நிற்கமாட்டேன் குழந்தாய், நிற்க மாட்டேன். சரி, தேசப் பிரஷ்டமானவர்கள் திரும்பி வந்தால் என்ன தண்டனை?

சாதாரணமாக மரண தண்டனை தான் விதிப்பது வழக்கம்... ஆனால் விக்கிரமன் விஷயத்தில் யோசிக்க வேண்டிய அம்சங்கள் பல இருக்கின்றன. எல்லாவற்றையும் விசாரித்து எது நியாயமோ அதைச் செய்யலாம். வா... குழந்தாய்.

போகிறார்கள்.

யார் இந்தச் சிவனடியார்? உறையூரில் பல்லவ சக்கரவர்த்தியின் தர்பாரில் சிறுத்தொண்டரும் சிவனடியாரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சிம்மாசனம் காலியாக இருக்கிறது. விக்கிரமன் குற்றவாளிக் கூண்டிலே நிற்கிறான். சபையோர்களே! சக்கரவர்த்தி சபைக்கு வர இன்னும் சிறிது நேரம் ஆகும். அதுவரை இந்தச் சபை கூடியதன் நோக்கம் என்னவென்பதை உங்களுக்கு எடுத்துரைக்கும்படி அவர் என்னைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். உங்களுக்கு முன்னால் விசாரணைக்கு நிறுத்தப்பட்டிருக்கும் விக்கிரம சோழர், சக்கரவர்த்தியின் கட்டளையை மீறியது குற்றமானாலும் அதற்கு இவர் மட்டும் பொறுப்பாளி அல்ல... இதோ இருக்கும் என்