பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 135

இத்தனைக்கும் காரணமாயிருந்த இவரைக் காப்பாற்றுவதில்தான் என்னை முந்திக்கொண்டு விட்டார் இந்த இளவரசர். அதுவும் எந்த நிலையிலே? சிறைக் கஞ்சி, சிரச்சேதத்துக்கு அஞ்சி ஓட வேண்டிய நிலையிலே! இவை யனைத்தையும் மனத்தில் கொண்டு இவருக்கு ஏற்ற தீர்ப்பை வழங்க வேண்டிய நிலையில் உள்ள நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

போர்க்களத்தில் பார்த்திய மகாராஜாவுக்குக் கொடுத்த வாக்குறுதியை இவர் நிறைவேற்றி விட்டதாக நினைக்கிறீர்களா? அவர் சொன்னபடி விக்கிரம சோழர் வீர புருஷராக வளர்க்கப்பட்டி ருக்கிறார் என்பதை நம்புகிறீர்களா?

சபை ஆம். ஆம்.

சிறு: அப்படியானால் தந்தைக்குத் தந்தையாக இருந்து, தாய்க்கும் தக்க துணையாயிருந்து தன்னையும் வீர புருஷராக்கிய இந்த வேஷதாரியின் உண்மை சொரூபத்தை அறிந்து கொள்ள விக்கிரம சோழர் மட்டுமல்ல, குந்தவிதேவியார் மட்டுமல்ல, எல்லோருமே ஆவலாயிருக்கிறீர்கள், இல்லையா? இதோ பாருங்கள. சிவனடியார் வேஷத்தைக் கலைக்கிறார். யாவரும் திடுக்கிடுகின்றனர். பல்லவ சக்கரவர்த்தி நரசிம்மவர்மர் அங்கே நிற்கிறார்.

குந்: அப்பா!

அவரைத் தாவி அணைக்கிறாள்.