பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 145

விந்தனுக்கு இத்தகைய புகழ் மாலைகளால் ஜீவிக்க முடியவில்லை எனினும் போராடவே செய்தார். அவரின் போராட்டக் கூர்முனை மங்கிவிடாமல் பாதுகாக்கப்பட்டது. அதுவே அவரின் பலமும் பலவீனமும் ஆகும்.

சினிமாவிலிருந்து விலகி அதனுடன் முட்டிமோதி வெற்றி காண விரும்பாதவர்கள் பலர். அவர்களில் ஒருவர் விந்தன்.

எழுத்துலகில் பல போராட்டங்களைக் கண்ட விந்தன், சினிமாவில் அத்தகைய போராட்டங்களைத் தொடங்க விரும்பவில்லை. கடைசியாக சினிமாவின் மேல் கோபம் குறையாமல் இருந்தது என்றே சொல்லவேண்டும்.

விந்தன் சினிமாவின் பேரில் கொண்டிருந்த கோபம் மிகச் சாதாரணமானது. அவரால் சினிமாவையும் அதில் ஆதிக்கம் செலுத்தும் நடிகர்களையும் அடக்க முடியாததுதான். எனினும் அவரின் கோபத்தின் வெளிப்பாடே பல சாதனைகள் செய்ய ஆரம்பித்தன.

விந்தனின் கோபம் தணிந்து அவர் சினிமாவைத் திரும்பிப் பார்க்கத் தொடங்கினார். அப்போது அவர் முன்னால் சினிமா கம்பீரமாக எழுந்து நின்றது. அதன் கம்பீரமும் கலையழகும் தன் கால் தூசு என்று கருதினார். நடிகர்களின் நடமாட்டத்தை ஊன்றிக்