பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o

14 மு. பரமசிவம் :

என்று போற்றிப் புகழ்ந்த ஏராளமான புத்தகங்கள் வெளிவந்தன.

இக்கால கட்டத்தில் நிமிர்ந்த நடை, நேரான பார்வை, எவருக்கும் வளையாத பேனா இவற்றுடன் சினிமாவின் மேன்மைக்கு, வளர்ச்சிக்குத் தம்மை முழுமையாக அர்ப்பணித்துகொண்ட ஜனசக்தி' பத்திரிகையின் துணையாசிரியரும், பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினருமான தோழர் அறந்தை மு.நாராயணன் பல நூல்களை எழுதினார். அந்நூல்கள் மக்களால் பெரிதும் பாராட்டப்பெற்றன.

முற்போக்கு எழுத்தாளர் அறந்தை நாராயணனின், சினிமாவைப்பற்றிய அவருடைய பார்வை, தகவல்களைத் தொகுத்த நேர்த்தி, இடைஇடையே இடதுசாரிக் கண்ணோட்டத்துடன் இணைத்த விமர்சனங்கள் அனைத்தும் என்னைக் கவர்ந்த அம்சங்கள்.

தமிழ் சினிமாவின் வரலாற்றில் ஆதார பூர்வமான தகவல்களுடன் நூல்களை எழுதிப் புகழ் பெற்றவர் அமரர் அறந்தை நாராயணன் அவர்களேயாவார்.

எனக்கு இந்நூல் எழுதத் தூண்டுதலாக இருந்தது அறந்தையின் எழுத்துக்களேயாகும். அதனால் இந்நூலை அமரர் அறந்தை நாராயணன் அவர்களுக்கு காணிக்கையாக்குகிறேன்.

விந்தன் சினிமாவில் இருந்து விலகி நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. ரொம்பவும் காலங்கடந்து

இந்தப் புத்தகத்தை எழுதநேர்ந்த எனக்குச் சரியான தகவல்கள் கிடைக்க வழியும் வாய்ப்பும் இல்லாமல்