பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 163

'பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் திருமதி டி.ஆர். ராஜகுமாரி அம்மையார் அவர்களின் புதுமனை புகுவிழா சிறப்பாக நடை பெற்றுக் கொண்டிருந்தது. திரு. சி.எஸ். ஜெயராமன் பாடிக் கொண்டிருந்தார். மக்கள் வெள்ளம் போல் திரண்டிருந்தார்கள். கார்த்திகை விளக்கு வைப்பது போல் சுற்றிலும் மின்சார விளக்குகள் போடப் பட்டிருந்தன. ըլք հմ նu முடுக்கிலுள்ளவர்களின் முகங்களும் நன்கு தெரியுமாறு அவை அமைக்கப் பட்டிருந்தன. மேடைக்கருகில் நானும் உட் கார்ந் திருந்தேன். என்னை மற்றவர்கள் கவனிக்கும் அளவுக்கு நான் அப்போது விளம்பரம் பெற்றிருக்கவில்லை? ஆனால் மற்றவர்களின் செயல் ஆற்றல்களைக் கவனித்துச் சிந்திக்கும் அனைத்து மனப்பாங்கும் பெற்றிருந்தேன்.

சி.எஸ். ஜெயராமன் நன்றாகப் பாடிக் கொண்டி ருந்தார். மக்களும் வெகுவாக ரசித்து அவ்வப்போது கைதட்டித் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். திடீரென்று கூட்டத்தினரிடையே சலசலப்பு ஏற்பட்டது. என்ன குழப்பம் என்று நான் திரும்பிப் பார்த்தேன். கை தட்டல்கள் ஒலித்தன! ஆமாம், பாகவதர் அவர்கள் கூட்டத்தின் ஒருபுறத்தில் வந்து கொண்டிருந்தாள்கள்.

அவரைச் சுற்றி ஏதோ ஒர் ஒளி வீசிக் கொண்டிருந்ததாக நான் அப்போது உணர்ந்தேன்.

மேடைக்கு அருகில் அவருக்கென நாற்காலி

போடப்பட்டிருந்தது. சி.எஸ். ஜெயராமன் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தார்.