பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

多

  • திரையுலகில் விந்தன் 173

லைட்டை இந்த வெயிட்டாலே கட்டி இழுக்கச் சொன்னேன். விஷயம் முடிஞ்சது. கிரேன் இல்லாம லாரி கிளம்பிடுது.

ஆஹான்னான் ஒருத்தன். நல்ல மெக்கானிக்கல் பிரெயினுன்னான் இன்னொருத்தன். ஊருக்கு வந்து சேர்ந்தோம். மறுநாள் காலையிலே வந்து பார்த்தா, என் வீட்டு வாசலிலே பிளைமவுத் கார் வந்து நிற்கிறது. என்ன விஷயம்? சுந்தரம் அய்யங்கார் அனுப்பினார்னு சொன்னானுக. எங்கிட்ட இதுக்குப் பணம் ஏதுன்னு கேட்டேன். உங்களுக்கு எப்போ செளகரியமோ அப்போ கொடுங்கன்னு அய்யங்கார் சொன்னதாகச் சொன்னாங்க.

ஐநூறும் ஆயிரம்னு அந்தக் கடனை அடைச்சேன். அதிலிருந்து அய்யங்கார் மகன் துரைசாமிக்கும் எனக்கும் ஏற்பட்டது தொடர்பு அவர் மறையற வரையில் இருந்தது. நான் ஜெயில்லே இருந்தபோதும் அவர் பொண்ணு கூட வந்து என்னை பார்த்துட்டுப் போச்சு.

இவ்வாறு எம்.ஆர். ராதாவின் நடிப்பின் ஆற்றலால், அறிவால் பல தொழிலதிபர்கள், நீதிபதிகள், டாக்டர்கள், தமிழறிஞர்கள், அரசியல் வாதிகள் என்ற பலர் அவருடன் நட்பு கொண்டு அவர்களின் நல்வாழ்த்துக்களை நல்கியிருக்கிறார்கள்.