பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

•

  • திரையுலகில் விந்தன் 19

வார இதழ்களில் வைரக் கதைகளை வார்த் தளித்தார் விந்தன். வெள்ளித்திரையும் அவரை அள்ளி அணைத்துக் கொண்டது. கள்ளச்சிரிப்பும் கொள்ளைக் குணமும் உள்ளவர்கள் அங்கே காலந் தள்ளலாம் நயந்தும் நெளிந்தும் நல்லவராகலாம். உள்ளதை உள்ளபடி உரைப்போர் உதவாக்கரை என ஒதுக்கப் படுவார். ஒட்டி உறவாடாமலும், கட்டித் தழுவாமலும் தான் தானாகவே, நிறம் மாறாத நெஞ்சினராய் அங்கே செயல்பட்டவர் விந்தன்.

உருமாற்றம் பெறாத உண்மை, ஊருக்குப் பிடிக்குமா? உறவுக்கு அடுக்குமா? உதறிவிட்டு ஓடி வந்தார் பிழைக்கத் தெரியாத அப்பாவி சூடுபட்ட பூனை! சூளைச் செங்கல்லானது. குளத்தங்கரைப் பூவுக்குக் கொலுவேறிய செங்கல்சாமி!

விந்தைச் சாமியின் விளைச்சலில் ஒரு பகுதியைத் திரட்டிச் சுருட்டிப் புத்தகச் சுருக்கமாய்ப் பொதிந்து கொடுத்திருப்பவர் பழைய பக்தர் பரமசிவம். படிக்கலாம், நினைவில் பதிக்கலாம்.

பழைய பரமசிவம் பழையதைப் படைத் திருக்கிறார். படிப்போம். சுவைப்போம்! பழமை புதுமைக்கு வித்தாகும். சிந்தனைக்குச் சொத்தாகும்.

பரமசிவம் விந்தனிடம் பாசமுள்ள பழையசிவம். அவருக்குப் பாராட்டு! விந்தனைப் போற்றுவோம்! சிந்தனைச் சுடர் ஏற்றுவோம்! எழுத்தின் வெற்றி என்றும் நிலைக்கும்.

அன்பன் வெள்ளையாம்பட்டு சுந்தரம்