* திரையுலகில் விந்தன் 83
பொன்: அடி வள்ளி! பொண்ணு வாசனை ஆளையே
வள்:
இழுக்குதே. இன்னும் எத்தனை நாளைக்கு உன் கையால் கம்பு அடையும் கீரைக்குழம்பும் சாப்பிட எனக்குக் கொடுத்து வெச்சிருக்கோ, தெரியலே. ஒரு நாளைப்போல நீயும் இப்படித்தான் சொல்லி கிட்டிருக்கே. இன்னொரு தடவை அப்படிச் சொன்னே, இந்த அடுப்பை வெட்டிக் காவிரியில் போட்டுடுவேன்! ஆமாம்.
பொன்: விளையாட்டுக்குச் சொல்லலே வள்ளி!
நேத்து மகாராஜாவும் மகாராணியும் பேசிக் கிட்டிருந்ததைக் கேட்டேன். யுத்தம் வரத்தான் போகுதாம். வந்தா உனக்கென்னன்னு கேக்கிறேன்? உன்னை யாரு யுத்தத்துக்கு அழைக்கிறாங்க? உன் பாட்டுக்குப் படகோட்டிக்கிட்டிருக்க வேண்டியது தானே!
பொன்: அதுதான் இல்ல! மகாராஜா கால்லே விழுந்து
கேட்டுக்கப்போறேன், என்னையும் யுத்தத்துக்கு அழைச்சிகிட்டுப் போகச் சொல்லி...
வள்ளி; நானும் உன் கால்லே விழுந்து கேட்கப்
போறேன். என்னையும் யுத்தத்துக்கு அழைச்சுக் கிட்டுப் போகச் சொல்லி. உனக்கு அது பிடிக்க லேன்னா இப்படியாச்சம் செய். கல்யாணத்துக்கு முந்தி காவிரியாத்தோடு போனவளைக் கரை சேர்த்தே பாரு...