பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 7

அவர் சினிமா உலகில் பிரவேசித்து எய்திய வெற்றிகளையும், அனுபவித்த சிரமங்களையும் நண்பர் மு.பரமசிவம் இந்நூலில் நன்கு பதிவு செய்திருக்கிறார்.

நண்பர் மு.பரமசிவம் எழுத்தாளர் விந்தன் அவர்களிடம் அன்பும் மதிப்பும் கொண்டு பழகியவர். விந்தன் மறைவுக்குப் பிறகு, விந்தனின் சிறப்பு களையும், தனித்தன்மைகளையும், சாதனைகளையும் தமிழ் உலகின் கவனத்துக்குக் கொண்டு வரும் வகையில் தொடர்ந்து பல நூல்கள் எழுதியும், தொகுப்பு நூல்கள் தயாரித்தும் வெளியிட்டிருப்பவர். அவர் இப்போது விந்தனின் சினிமா உலக அனுபவங்களையும் போராட்டங்களையும் தக்க முறையில் பதிவு செய்திருக்கிறார் இந்த நூலில்.

விந்தன் கதை வசனம் எழுதியதோடு திரைப்படப் பாடல்கள் எழுதுவதிலும் வெற்றிபெற்றுத் திகழ்ந்தார். அவரது இத்துறைச் சாதனைகளையும் மு.ப.திறமை யாக வாசகர்கள் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்.

விந்தன் வசனம் எழுதிய 'அன்பு,"கூண்டுக் கிளி' ஆகிய படங்களில் நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பைப் பற்றி என்னிடம் வந்து அடிக்கடி சொல்லுவார்.அந்த அளவுக்கு சிவாஜியின் நடிப்பில் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தவர்.இன்றிருந் திருந்தால் நடிகர் திலகத்தின் வாழ்க்கை வரலாற்றையும் சிறப்பாக எழுதி சிவாஜியின் புகழுக்குச் சிறப்பு சேர்த்திருப்பார்.

சினிமாத்துறையில் ஓரளவு வெற்றிபெற முடிந்த விந்தன், தொடர்ந்து அங்குக் காலூன்றிப் பிரகாசிக்க