* திரையுலகில் விந்தன் 91
விக்:
பார் :
விக்
பார்:
விக்:
விக்:
பார் :
யுத்தத்துக்குப் படை கிளம்புகிறது...ஆஹா... எவ்வளவு பெரிய சைன்னியம் அப்பா!
என்ன விக்கிரமா?
- இந்தச் சித்திரங்களை யெல்லாம் எழுதியவர்
யார் அப்பா?
என் கையினால் நானே எழுதிய சித்திரங்கள் இவை... கடந்த பன்னிரண்டு வருஷகாலமாக இரவிலும், பகலிலும் தூங்கும்போது, விழித்திருக்கும்போது நான் கண்டு வந்த கனவுகளைத்தான் இங்கே எழுதியிருக்கிறேன் குழந்தாய்!... நன்றாய்ப் பார். யாருடைய சைனியங்கள் இவை, தெரிகிறதா?
தெரிகிறது அப்பா. முன்னால் புலிக்கொடி போகிறதே! சோழ ராஜ்யத்தின் படைகள்தான் இவை... ஆனால்...
அவ்வளவு கம்பீரமாக நடந்துபோகும் அந்தப் பட்டத்து யானையின் மேல், யானைப் பாகன் மட்டுந்தானே இருக்கிறான்? அம்பாரியில் யாருமே இல்லையே...
நல்ல கேள்வி கேட்டாய்... வேண்டுமென்றே தான் அப்படி யானையின் மேல் யாரும் இல்லாமல் விட்டிருக்கிறேன். விக்கிரமா...நம் சோழ வம்சத்திலே எந்த அரசன் இம்மாதிரி பெரிய சைனியத்தைத் திரட்டிக்கொண்டு திக் விஜயம் செய்யப் போகிறானோ, அவனுடைய உருவத்தை அந்த அம்பாரியில் எழுத வேண்டும்.