சங்ககாலத் தமிழின் சிறப்பியல்புகள் 73 'நிலங்கிளையா நாணிநின்ருேள்' - (அகம் 16) இடையண்ண ஒலிக்குப்பின் அகரம்: தொல்காப்பியத் தமிழில் இடையண்ண ஒலிகளான ச், ஞ், ய் முதலியன மொழி முதலில் அகரத்துடன் வாரா. ஆனல் சங்க காலத் தில் இந்நிலை மாறி விட்டது. இது கிளை மொழிகளிலிருந் தும் பிறமொழிகளிலிருந்தும் சொற்களைக் கடன் வாங்கிய தன் விளைவாக இருக்கக் கூடும். - சான்றுகள் ...... "சமம் தாங்கவும்......' - (புறநா 14-4) தொடர்ப்படு ஞமலி’யின்...... - (புறநா 74-3) ... 'யவனர் நன்கலம் தந்த...... (புறநா 56-18) செத்தான் (வா+வந்தான் சா +சத்தான் எனவராமல்) போன்ற சில சொற்கள் இன்னும் பழைய வடிவத்தையே கொண்டிருக்கின்றன. இவற்றின் வழக்கு மிகுதியே இதற் கான காரணமாகலாம். தொடக்க நிலையில் மொழிமுதல் சகர வெடிப்பொலிக்கும் அப்புறம் எகர அகர வேற்றுநிலை வழக்குக் கிடையாது, ஆனல் சங்க காலத்தில் இது காணப் படுகிறது. சான்றுகள் கள்வன் சமழ்ப்பு முகங்காண்மின்' (LJtflurr—20) செம்மை சான்ற காவிதி மாக்களும் (மதுரைக்காஞ்சி) , யகரமெய் முன்னர் மொழி முதலில் ஆகாரத்துடனேயே வந்தது. ஆனல் தமிழில் சமஸ்கிருதம் பிராகிருதம் ஆகிய