பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

சந்தான குரவர் நால்வர்.

மெய்கண்டார், அருணந்திசிவாசாரியார் மறைஞான சம்பந்தர், உமாபதிசிவாசாரியார் இவர்கள் முத்தி பெற்ற குரு பூசை நாள்கள் :

மெய்கண்டார் - ஜப்பசிச் சுவாதி
அருணந்தி சிவாசாரியார் - புரட்டாசிப் பூரம்
மறைஞான சம்பந்தர் - ஆவணி உத்தரம்

உமாபதிசிவம் - சித்திரை அத்தம்.

சைவசித்தாந்த நூல்கள் பதினான்கு

திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞான போதம், சிவஞானசித்தியார், இருபாவிருபது. உண்மைவிளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப்பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மைநெறிவிளக்கம் சங்கற்ப நிராகரணம்.

நால்வேதம்: இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்பன.

ஆறங்கம்: சி௸, கற்பசூத்திரம், வியாகரணம், நிருத்தம், சந்தோ விசிதி, சோதிடம் என்பன.

பதினெண்புராணம்: சைவம், பௌஷிகம், மார்க்கண்டம், லிங்கம், காந்தம், வராகம், வாமனம், மச்சம், கூர்மம், பிரமாண்டம் - இவை பத்தும் சிவபுராணம். காருடம், நாரதீயம், விஷ்ணு புராணம், பாகவதம் நான்கும் விஷ்ணு புராணம். பிரமபுராணம், பதும புராணம் இரண்டும் பிரமபுராணம். ஆக்கினேயம் அக்கினி புராணம். பிரமகைவர்த்தம் சூரியபுராணம்.

இறைவன் ஆடல்புரியும் ஐந்து சபைகள்:

(!) தில்லையிற் பொன்னம்பலம்
(2) மதுரையில் வெள்ளியம்பலம்
(3) திருநெல்வேலியில் தாமிரசபை
{4) திருக்குற்றாலத்தில் சித்திரசபை

(5) திருவாலங் காட்டில் இரத்தின சபை
———————