பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இப்பதிப்பில் தில்லைத் 'திருமடல்கள்' என்ற புதிய பகுதி பிற்சேர்க்கையில் இணைக்கப்பட்டுள்ளது. இந் நூலை ஆங்கிலத்தில் தொழிபெயர்ப்புச் செய்து வெளியிட வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. தில்லை அம்பலவன் திருவருளால் விரைவில் செயல் கூடும்.

தில்லை நடராசப் பெருமானின் வடிவத்தை முகப்புப் பட்டத்திற்காக அழகாக வரைந்து உதவிய மாரியப்பா நகர் ஓவிய ஆசிரியர் திரு. K.N. சேதுராமன், நல்ல முறையில் இரண்டாம் பதிப்பையும் அச்சிட்ட அண்ணாமலை நகர் சிவகாமி அச்சகத்தார், இவ்விரண்டாம் பதிப்பை வெளியிடுவதற்கு உறுதுணையாக இருந்த அன்பர்கள் திரு க. சுவாமிநாதன் மற்றும் திரு இரத்தின சம்பந்தம் ஆகியோருக்கு எங்கள் நன்றியை உரிமையாக்கிக் கொள்கிறோம்.

இந்நூலைப் படித்து, பொன்னம்பலவனின் தண்ணருளை பெற வேண்டுகிறோம்.

9, கனகசபை நகர்
சிதம்பரம்
09-12-88

இங்ஙனம்
S. திருநாவுக்கரசு
செயலாளர் தில்லைத்தமிழ்மன்றம்,