பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72



"பொன்வண்ணம் எவ்வண்ணம்
அவ்வண்ணம் மேனி பொந்திலங்கும்
மின் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
வீழ்சடை வெள்ளிக் குன்றந்
தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மால்விடை தன்னைக்கண்ட
என் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ண
மாகிய ஈசனுக்கே.”

எனவரும் இவ்வந்தாதியின் முதற்பாடலாகும். இத்திருவந்தாதியின் முதற்பாடல் பொன்வண்ணம் எனத் தொடங்கி நூறாவது செய்யுள் பொன்வண்ணமே என முடிந்து அந்தாதியாய் அமைதலின், இது பொன் வண்னத்தந்தாதி யென்னும் பெயருடையதாயிற்று.

நக்கீரதேவ நாயனார்

"கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு, அருளிய திருமுகத் தழகுறு சிறுநகை இறைவன்” எனவும், ஊன்புக்க வேற் காளியின் கோபந்தவிரத் தேன்புக்க தண்பணை சூழ் தில்லைச் சிற்றம்பலவன் தான்புக்கு நட்டம்பயிலும் எனவும் வரும் திருவாசகத்தை அடியொற்றிய நிலையில் நக்கீர தேவ நாயனார்

"தாரகன் தன் மார்பிற் றனிச்சூலம் - வீரங்
கொடுத்தெரியு மாகாளி கோபந் தவிர
எடுத்த நடத்தியல்பு போற்றி"

எனப் போற்றித் திருக்கவி வெண்பாவில் இறைவனது திருநடனத்தைப் பரவிப் போற்றியுள்ளார்.

பரணதேவநாயனார்

"ஆங்குரைக்க லாம்பொன் மலர்ப்பாத மஃதன்றே
பாங்குரைக்க லாம்பொன் னணிதில்லை - யாங்குரைத்த
அம்பலத்தும் அண்டத்தும் அப்பாலு மாய்நின்ற
அம்பரத்தும் அண்டத்து மாம்" (சிவ -17)

எனவும், சிவபெருமான் திருவந்தாதியில் தில்லைப்பெருமானைப் போற்றியுள்ளார்.