பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

32 மூன்ருவது அங்கம் முதல் காட்சி இடம்-அரண்மனையில் அரசரது அந்தப்புரம். அசசர் மதுபானம் செய்துக்கொண்டும் பெண்களுடன் சாசமாடிக்கொண்டும் இருக்கிருர். சில பெண்கள் பாடிக்கொண்டிருக்கின்றனர் ; சிலர் ஆடிக்கொண் டிருக்கின்றனர் ; சிலர் வாத்யம் வாசித்துக்கொண் டிருக்கின்றனர் ; சிலர் அரசர் எறியும் புஷ்பங்களே, நடுவிலிருக்கும் சிறு குளத்தில் குதித்து பிடித்துக் கொண்டிருக்கிருரர்கள். - மங்திரி ஒருபுறமாக வருகிருர், யார் அங்கே ? மஹாராஜாவுக்கு நமஸ்காரம். வாரும் இங்கே ! வாரும் இங்கே !-போய் அழைத்து வாருங்கள் மந்திரியை என் அருகில்-இங்குவர அவர் பயப்படுகிரு.ர். (பெண்கள் அவ்வாறேசெய்கின்றனர்.) ஆ வந்தீரா !-நீர் வருவதற்கென்ன தடை ?-நமது ராஜ்யத்தைப்பற்றி ஏதாவது முக்கிய சமாச்சாரம் கொண்டுவந்தீரா ?-முக்கியமான விஷயம் ஏதாவது இருந்தால் சொல்லும்-பழைய கதையெல்லாம் வேண் டாம். பிரஜைகளெல்லாம் மிகவும் கஷ்டப்படுகிருர்கள், அழுகிருர்கள், கண்ணிர் விடுகிருரர்கள் இதெல்லாம் எனக்குத் தெரியும் - நான் சந்தோஷமாயிருக்கி றேன், அதுபோதாதா உமக்கு ?-அதோ பாரும் ! அந்த அழகிய பெண்ணேப்பாரும். (குளத்தில் ஒரு புஷ்பத்தை எறிய, அதை ஒரு பெண் வாயால் கவ்விக் கொள்கிருள்). பலே கண்மணி என் ஆக்கினைக்கு இவர்களெல்லாம் எவ்வளவு உட்பட்டிருக்கிருரர்கள் பார்த்தீர்களா ? விஷமூட்டிய ஒரு புஷ்பத்தை எறிந்த போதிலும் அப்பெண் அதையும் தன்வாயால் பற்றிக் கொள்வாள் -என்ன ? உமக் சந்தேகமாயிருக் கிறதா என்ன ? - இதோ காட்டுகிறேன். - யார் அங்கே? கொஞ்சம் விஷம் கொண்டுவருவாய் சீக்கிரம்