பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

○

உடைந்த குழல்

O

சில்வர் ஒக்குக் குடைகளை விரித்த வண்ணம் சேர்வராயன் மலை சேலம் பொருட்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தது.

அந்த நெடுங்கல் புற்றிலிருந்து நீர்ப்பாம்புகள் ஊர்ந்துவந்து மணிமுத்தாற்றில் கலந்தன. வாழ்ந்து கெட்ட

செல்வனைப் போல்

மணிமுத்தாறு தன் கையில் உருண்டு கொண்டிருந்த சில்லறையை எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தது.

மலையிலிருந்து இறங்கிய களைப்புத் தீர

மணிமுத்தாறு மூக்கனேரியில் இளைப்பாறி விட்டு மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தது.