பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூஞ்சோலையை நாகன் முதுகில் செலவில்லாமல் ஏற்றிவிட்டான்.

மூத்தமனைவியை இழந்து முதுமையின் வாசலை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த நாகனுக்குசெங்கான் கொடுத்த பொங்கல் இனாம் பூஞ்சோலை,

T

அந்த வட்டாரத்தில் வட்டமிட்ட இளவட்டங்களுக்கு மூக்கனேரித் துறை மோகினியாகக் காட்சி தந்தாள் பூஞ்சோலை.

முழந்தாளுக்கு மேல் துரக்கிச் செருகிய சேலையுடன் மோலித் துணியைப் பிழியும்போது சில குறும்புப் பார்வைகள் தன் மேனியின்

மிருதுவான இடத்தில் கம்பளிப் பூச்சிபோல் ஊர்வதை அனாயாசமாகத் தட்டியெறிந்துவிட்டு வேலையில் மூழ்கிவிடுவாள்.

காய்ந்த துணிகளைக் கட்டி வைத்துவிட்டு, ஈரமான எண்ணங்களோடு குடிசை வாசலில்

குந்தியிருப்பாள் அவள்.

$2.