பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏரியின் வெறுமையும் அவள் இதயத்தின் வெறுமையும் கனத்த பனிப்பட்லமாய் நிற்க அவள் உட்கார்ந்திருப்பதுண்டு.

ஒரு நாள்நிலவின்இேரவுப்பகல் பூஞ்சோலையின் உணர்ச்சிகளில் விழிப்பையுண்டாக்கியது. ம்ெல்லிய அவள் கனவுத்திரை நாகனின் குறட்டையால் படபடத்தது.

இதய இறுக்கத்தை நெகிழ்த்துவிடக்

குடிசையை விட்டு வெளியில் வந்தாள். நிர்வாண அமைதி எங்கும் தொங்கிக் கொண்டிருந்தது.

இலைகள் ஒன்றோடொன்று உராயும் மெல்லோசை கூட அவள் காதில் விழுந்தது. அந்த அமைதியை அங்கீகரித்த அவள் மெதுவாக நடந்து வந்து ஏரிக்கரையில் அமர்ந்தாள்.

சிறிய கல்லொன்றை எடுத்து ஏரியில் போட்டாள்.