இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஒரு மயக்கம்... ஒரு கிறக்கம் கலந்தல்லவா வருகிறது!
நாகன் ஒருநாள் அவளை வற்புறுத்திக் குடிக்கவைத்த போது அவள
உடம்பிலும் உள்ளத்திலும் ஏற்பட்ட மாற்றம் ஒருவிதத் தலைசுற்றல் எல்லாமே இப்போது அவளுக்கு ஏற்பட்டது.
தானும் அந்த இசையில் இசையாக மயக்கத்தில் மயக்கமாகக் கலந்து விட்டால் என்ன? என்ற உந்துதல் அவளை ஆட்டிப் படைத்தது.
அன்று ஒரு நாள்
ரோமாபுரியில்
எலிகளையும்
இளஞ்சிறுவர்களையும் இழுத்துச் சென்ற மந்திரக் குழல்போல் இவளையும் அந்தப் புல்லாங்குழல் இழுத்துச் சென்றது.
ஆற்றில் வெள்ளம் அதிகரித்து ஊன்றியிருந்த காலகள நழு ஆற்றோடு போவதுபோல் அவளும் அந்த இசையோடு போனாள்.
22