பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசை நின்றது. * நீந்தத் தெரியாத அவள்ஏரிக்குள்இடுப்பளவு தண்ணீரில் நின்று கொண்டிருந்தாள்.

அந்த இசை... இன்னும் சிறிதுநேரம் நீண்டிருந்தால்....! அவளுககு - அச்சத்தால் உடமபு சில்லிட்டுப் போயிற்று

அடுத்தநாள்

பகற் பொழுதெல்லாம் அந்த இசைப்போதையில் அவள் தள்ளாடிக் கொண்டிருந்தாள். குடிகாரன் மீண்டும் குடிக்கும் நேரத்தை ஏக்கத்தோடு எதிர்நோக்கியிருப்பதுபோல் இரவையவள் எதிர் நோக்கியிருந்தாள்.

நள்ளிரவில் நாகனுடைய துக்கத்தை அவன் குறட்டையால் அளந்து ப்ார்த்துவிட்டு அவள் வெளியேறினாள்.

அந்த இசையில் அவளுட்ம்பு இலேசாகிக் காற்றில் மிதப்பதுபோல் மிதந்தாள் அவள்.

23