பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்பொன் பேழையில் அரசி என்னைச் சிறைப்படுத்தி வைத்தாள்.

நான்--

ஒரே கருவில் பல முத்துக்களைச் சுமந்து கொண்டு பாடித்திரியும் பசும் பொன் சிப்பி. ஒருவரும் பார்க்காத நேரத்தில் முத்துக் குளிப்பதுபோல் வஞ்சிப்பத்தனும் என்னை மூச்சடைக்கித்தான் எடுத்துச் சென்றான்.

நான்

அரசமா தேவியின் அடிகளில் பொருத்தப்பட்ட அபாய அறிவிப்பு

அவளஅவசரப்படும் போதெல்லாம் அலறி அலறி எச்சரிக்கை விடுவது என்றன் வழக்கம்

எச்சரிக்கும் நான்

இல்லாத காரணத்தால் அரசியின் அவசரம் கோவலன் தலையைக் கொய்து விட்டது.

கம்மியனால் கடத்தப்பட்டு வேலைப்பாடு தெரிந்த அவனால் வேதனையோடு கற்பழிக்கப்பட்டுத் தீவினைக் கருவைத் தெரியாமல் மறைத்துத் திரிந்து கொண்டிருந்த நான்,

35