பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்சந்தனத்தில் புதைந்தமலர். எவ்வளவு நாள சாக்கடைச் சேற்றைச் சகித்துக்கொண்டிருக்க முடியும்? வெளியேறி வந்துவிட்டேன்.

முட்டையைக் கூடத் தட்டித் தட்டித்தான் உடைக்கிறோம். கோவலன் உள்ளத்தைத் தொட்டுப் பார்க்காமலேயே உடைத்துவிட் டிர்களே!

கூவலைக் கேட்க அஞ்சிச் சேவலின் குரல்வளையை முறித்துவிட் டீர்களே?

ஐயனார் கோவிலில் வெட்டப்படும் பலிக்கடா கூடத் தலையில் தண்ணீர் தெளிக்கப்பட்டுத் தலையைத் துலுக்கி ஒப்புதல் கொடுத்தால்தான் வெட்டுவார்கள்!

பாவம்! பூம்புகார்ச் செல்வனுடைய தலையின் விலை இவ்வளவு மலிவாகி விடுமென்று கனவிலும் நான் கருத வில்லை.

நீதிமன்றம் ஆக்கும் தீர்ப்புக்குக்

37